மத சுதந்திர மீறல் மற்றும் சகிப்பின்மை சர்வதேச சர்ச்சையை தூண்டுகிறது

தென் கொரிய உள்ளூர்  அரசாங்கமானது,  78 நாடுகளில் இருந்து 30,000 பேர்  பங்கேற்கவிருந்த  சர்வதேச நிகழ்வை ரத்து செய்ததன் விளைவு  சர்வதேச ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத சுதந்திர மீறல் மற்றும் சகிப்பின்மை சர்வதேச சர்ச்சையை தூண்டுகிறது

தென் கொரிய உள்ளூர்  அரசாங்கமானது,  78 நாடுகளில் இருந்து 30,000பேர்  பங்கேற்கவிருந்த  சர்வதேச நிகழ்வை ரத்து செய்ததன் விளைவு  சர்வதேச ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


அக்டோபர் 29ம் திகதியன்று, தென் கொரிய அரசாங்க நிறுவனம் ஒன்றின் நிர்வாக முடிவானது சர்வதேச விவாதத்தை ஏற்படுத்தியதுடன்,  மத சுதந்திரம் பற்றிய விவாதம்  மற்றும் நிதி இழப்பையும்  ஏற்படுத்தியது.

இரண்டு முக்கிய மத அமைப்புகளின் ஒன்றிணைப்புடன் "மதத் தலைவர்கள் மாநாடு  மற்றும் பட்டமளிப்பு விழா" தென் கொரியாவிளுள்ள  பாஜுவில் நடைபெற இருந்தது.

இந்த நிகழ்வில் 57 நாடுகளில் இருந்து 30,000 பேர் பங்கேற்க இருந்ததுடன், இதில் கிறிஸ்தவம், பௌத்தம், இஸ்லாம் மற்றும் இந்து மதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 1000 மதத்தலைவர்கள் பங்கேற்க இருந்தார்கள்.   


இருப்பினும்,  ஜியோங்கி மாகாணத்தின் கீழ் உள்ள பொது நிறுவனமான ஜியோங்கி சுற்றுலா அமைப்பு, முன் அறிவிப்பு  இன்றி  திடீரென இட வாடகையை ரத்து செய்தது. இந்த இறுதி  நிமிட முடிவானது  சர்வதேச நிகழ்வில் குறிப்பிடத்தக்க நிதி சேதத்தை ஏற்படுத்தியது.  

இந்த இறுதி நிமிட இரத்தானது, ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பாகுபாடு, மத சுதந்திர மீறல், மனித உரிமைகள் மற்றும் சட்ட செயல்முறையை மீறும் அரசியலமைப்பிற்கு முரணான செயல் என்று இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


அக்டோபர் 23 மற்றும் 28 ஆம் திகதிகளில் இந் நிகழ்வை  ரத்து செய்ய திட்டம் எதுவும் இல்லை என்று அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் கிடைத்ததாக  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு அமைப்புகளான கொரியாவை ஒன்றிணைப்பதற்கான மத்திய புத்த கவுன்சில் மற்றும் ஷின்ஷோன்ஜி இயேசுவின் சபை தெரிவித்தது.

ஒரு பக்கச்சார்பான  இந்த ரத்து ஒரு குறிப்பிட்ட மதக் குழுவை இலக்காகக் கொண்டு எடுக்கப்பட்டதுடன் இது  நியாயமற்ற நிர்வாக நடவடிக்கை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

அதே நாளில் திட்டமிடப்பட்ட மற்ற நிகழ்வுகளுக்கு எந்த  பாதிப்பும் இல்லை  என்று அவர்கள் மேலும் தெரிவித்ததோடு, ரத்து செய்யப்பட்டது "ஒரு குறிப்பிட்ட மதக் குழுவிற்கு எதிரான நிர்வாக முடிவு" என்று காட்டுகிறது, மேலும் இது “அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட சபைகளையும் அரசையும் பிரிக்கும் கொள்கையை மீறுகிறது.”

இது குறித்து ஜியோங்கி சுற்றுலா அமைப்பு கூறுகையில், சமீபத்திய வட கொரிய நடவடிக்கைகள் தொடர்பான பாதுகாப்பு மற்றும் வட கொரியாவில் இருந்து விலகிய குழுவின் திட்டமிட்ட செயல்பாடுகளே இந்த நிகழ்வை  ரத்து செய்வதற்கு காரணங்களாகக் கூறின. எவ்வாறாயினும், மோட்டார் சவாரிகள் மற்றும் DMZ க்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை போன்ற பிற நிகழ்வுகள் அதே நியமிக்கப்பட்ட பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டது.


இந்த சம்பவம் தென் கொரியாவில் மத சுதந்திரம் மற்றும் சகிப்புத்தன்மை குறித்த சர்வதேச விவாதத்தை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறையின் சர்வதேச மத சுதந்திர அறிக்கை, ஷின்ஷோன்ஜி இயேசுவின் சபை மீது வழக்குத் தொடுப்பது மற்றும் மசூதி கட்டுவதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளிக்க மறுப்பது போன்ற பிரச்சனைகளை முன்னரே எடுத்துரைத்துள்ளது.

கொரியாவை ஒன்றிணைப்பதற்கான மத்திய புத்த கவுன்சில் மற்றும் ஷின்ஷோன்ஜி இயேசுவின் சபை, மத சுதந்திரத்தை மதிக்கவும், மனித உரிமைகளை நிலைநிறுத்தவும், இந்த அநீதியான முடிவை சரிசெய்யவும் தென் கொரிய அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலைமையை  சர்வதேச அமைப்புகள் கண்காணித்து மத சுதந்திரத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.