கொழும்பில் உயர்தர உணவக அனுபவத்தை புதிய பரிமாணத்திற்கு கொண்டு சென்ற Charcoal

Charcoal Tandoor Fire & Grill in Colombo is attracting food lovers with its open kitchen, modern interiors, authentic North Indian cuisine, and immersive dining experience.

கொழும்பில் உயர்தர உணவக அனுபவத்தை புதிய பரிமாணத்திற்கு கொண்டு சென்ற Charcoal

கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டு சில மாதங்களேயான சாக்கோல் தந்தூர் ஃபயர் அண்ட் கிரில் (Charcoal Tandoor Fire & Gril) உணவகம், தற்போது நகரின் மிகமுக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. அங்கு பரிமாறப்படும் சுவையான உணவுகள் மட்டுமன்றி, அதன் வியக்கத்தக்க உட்புற வடிவமைப்பும் வாடிக்கையாளரை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.

இங்கு வரும் வாடிக்கையாளர்களை முதலில் ஈர்ப்பது அதன் விசாலமான இடவசதிதான். உயர்ந்த கூரைகள், திறந்தவெளி வடிவமைப்பு மற்றும் கொழும்பு நகரின் எழில்மிகு தோற்றம் ஆகியவை இந்த உணவகத்திற்கு ஒரு தனித்துவமான அழகைத் கொடுக்கின்றன. அத்துடன், இதமான விளக்கொளிகள் மற்றும் நுணுக்கமான கைவினை அலங்காரங்கள் உணவகத்தின் அழகை மேலும் கூட்டுகின்றன.

உணவகத்தின் அமைவிடம் குறித்து அதன் நிறுவனர் ரோஹித் சச்தேவ் குறிப்பிடுகையில், கொழும்பு நகரின்
அழகான காட்சிகளையும் அதன் விசாலமான பரப்பளவையும் வாடிக்கையாளர்கள் முழுமையாக அனுபவிக்கும் வகையிலேயே இந்த வடிவமைப்பு திட்டமிடப்பட்டதாகத் தெரிவித்தார். தனிமையான இரவு உணவு அல்லது நண்பர்களுடனான கொண்டாட்டங்கள் என அனைத்திற்கும் ஏற்ற வகையில் இந்த இடம் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த உணவகத்தின் உணவு கலாசாரம் வட இந்திய தந்தூரி மற்றும் முகலாய பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்திய துணைக் கண்டம் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க நறுமணப் பாதை (Spice Route) ஆகியவற்றின் தாக்கத்தை இங்குள்ள உட்புற வடிவமைப்புகள் மற்றும் கலைப்பொருட்கள் மூலம் அறிந்துகொள்ளலாம். குறிப்பாக, அரண்மனை வேலைப்பாடுகளை நினைவூட்டும் ஜாலி (துயடi) திரைகள், வடிவியல் கோலங்கள் மற்றும் பாரம்பரிய செம்பு பாத்திரங்கள் போன்றவை சமகால பாணியில் நேர்த்தியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த உணவகத்தின் மிகமுக்கிய சிறப்பம்சமாக அதன் திறந்தவெளி சமையலறை (Open Kitchen) விளங்குகிறது. நெருப்பை மையமாகக் கொண்ட 'சாக்கோல்' உணவகத்தின் சமையல் கலையை வாடிக்கையாளர்கள் தங்களின் மேசைகளில் இருந்தவாறே நேரடியாகக் கண்டு ரசிக்க முடியும். 

சமையற்கலைஞர்கள் தந்தூர் அடுப்புகளில் ரொட்டிகளை சுடுவதையும், இறைச்சிகளைத் தயாரிப்பதையும்
பார்ப்பதுடன், சமையலறையின் நறுமணமும் ஒலியும் உணவருந்தும் அனுபவத்தை மேலும் சுவாரஸ்யமாக்குகின்றன.

சமையலறையைச் சுற்றி அடுக்கி வைக்கப்பட்டுள்ள வண்ணமயமான நறுமண மசாலா ஜாடிகள், இந்தியா,
இலங்கை மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை இணைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க கடல்சார் வர்த்தகப் பாதையை நினைவூட்டுகின்றன. இந்த நறுமணப் பண்பாடு இலங்கை மக்களுக்கும் மிகவும் நெருக்கமானது என்பதால், கொழும்பு வாடிக்கையாளர்களுடன் இந்த உணவகம் எளிதில் ஒரு பிணைப்பை
ஏற்படுத்திக்கொள்கிறது.

தனிநபர்கள் முதல் குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் குழுக்கள் வரை அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவைப் பகிர்ந்து மகிழும் வகையில் இதன் இருக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாங்கொக் நகரில்
முதன்முதலில் தொடங்கப்பட்ட இந்த வர்த்தக நாமம், அங்கு பெற்ற அனுபவங்களைக் கொண்டு கொழும்பு நகரின் நுகர்வோரின் ரசனைக்கேற்ப தனித்துவமான மாற்றங்களுடன் இங்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

தற்போது கொழும்பு மக்களின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ள 'சாக்கோல்' உணவகம், பாரம்பரிய
வரலாற்றையும் சமகால கொழும்பு நகரின் நவீனத்துவத்தையும் இணைக்கும் ஒரு சிறந்த வாழ்வியல் அனுபவமாக மாறியுள்ளது.