இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிராந்திய தலைவரை நியமித்தது Coca-Cola !

Coca-Cola has announced the appointment of Mario Perera as the Regional Head for Sri Lanka and the Maldives. With over 14 years of experience in the food and beverage industry, Perera brings extensive regional and global leadership expertise in managing international brands.

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிராந்திய தலைவரை நியமித்தது Coca-Cola !

Coca-Cola நிறுவனம் இன்று மரியோ பெரேராவை இலங்கை மற்றும் மாலைதீவுகள் ஆகிய நாடுகளின் பிராந்திய தலைவராக நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது. 

உணவு மற்றும் பானங்கள் துறையில் 14 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்ட மரியோ பெரேரா, பல நாடுகளில் உலகளாவிய வர்த்தகநாமங்களை நிர்வகித்த விரிவான பிராந்திய மற்றும் உலகளாவிய தலைமைத்துவ அனுபவத்தைக் கொண்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டில் இந்தப் பதவியை ஏற்றுக்கொண்ட கௌஷாலி குசுமபாலாவுக்குப் பின்னர் மரியோ பெரேரா இப்பதவியைப் பொறுப்பேற்கிறார். தனது புதிய பொறுப்பில், பானங்களை நிரப்பும் பங்காளர்கள் (bottling partners) மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவுகளில் உள்ள பிற பங்குதாரர்களுடன் நெருக்கமாக இணைந்து வளர்ச்சி, புத்தாக்கம் மற்றும் சமூக நலன்களை மேம்படுத்த செயல்படவுள்ளார். 

புதிய பொறுப்பில், மரியோ நிறுவனம் முழுவதையும் வழிநடத்தும் பொறுப்பை ஏற்று, நிலைபேறான வளர்ச்சி, புத்தாக்கம் மற்றும் சிறந்த செயல்பாட்டை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளார். அவர் பானங்களை நிரப்பும் பங்காளர்களுடன் இணைந்து, பான வரிசையை விரிவுபடுத்துவதோடு, வாடிக்கையாளர் விருப்பங்களுக்கு ஏற்ப புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக வளர்ச்சிக்கான Coca-Cola-வின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்தவும் செயற்படுவார்.

மேலும், அவர் ஒழுங்குமுறை அமைப்புகள், அரசு அதிகாரிகள், தொழில் பங்காளிகள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் வலுவான உறவுகளை ஏற்படுத்தி, இலங்கை மற்றும் மாலைதீவுகளில் Coca-Cola-வின் செயல்பாடுகளுக்கு சாதகமான சூழலை உருவாக்குவதை உறுதிப்படுத்துவார்.

மரியோ 2018இல் இலங்கை மற்றும் மாலைதீவுகள் நாடுகளின் சந்தைப்படுத்தல் முகாமையாளராக Coca-Cola நிறுவனத்தில் இணைந்தார். அப்போது அவர் பல்வேறு பான வகைகளில் வர்த்தகநாம உத்திகளை வழிநடத்தினார். அவரது தலைமையின் கீழ் வர்த்தகநாமத்தின் மதிப்பு உயர்ந்ததுடன், வாடிக்கையாளர் ஈடுபாடு அதிகரித்ததோடு மட்டுமல்லாமல் வணிக வளர்ச்சியும் தொடர்ந்து முன்னேறியது. 

சமீபத்தில், அவர் Coca-Cola இந்தியா மற்றும் தென்மேற்கு ஆசியாவில் (INSWA) முன்னணி சந்தைப்படுத்தல் தலைவராக (Frontline Marketing Lead) முக்கிய பொறுப்புகளில் பணியாற்றினார். இந்நிலையில், பல பிராந்தியங்களை உள்ளடக்கிய குழுக்களை வழிநடத்திய அவர், பானங்களை நிரப்பும் பங்காளர்களுடன் இணைந்து பணியாற்றி, தயாரிப்பு முன்னுரிமைகள் மற்றும் வாடிக்கையாளர் மையப்படுத்தப்பட்ட முயற்சிகளை முன்னெடுத்தார். மேலும், பெரிய அளவிலான சந்தைப்படுத்தல் மற்றும் வாடிக்கையாளர் ஈர்ப்புத் திட்டங்களை வழிநடத்தி, பண்டிகைக்கால கொண்டாட்டங்கள் முதல் உலகளாவிய விளையாட்டு கூட்டாண்மைகள் வரை பல புத்தாக்கத் திட்டங்களையும் வெற்றிகரமாக வழிநடத்தினார்.

நாட்டின் பானத் துறையில் முன்னணியில் திகழும் Coca-Cola, புத்தாக்கம், டிஜிட்டல் மாற்றம் மற்றும் நிலைபேறாண்மை மூலம் பகிரப்பட்ட மதிப்பை உருவாக்குவதற்கு தொடர்ந்து  உறுதிபூண்டுள்ளது. புதிய தயாரிப்புகள், சமூக முன்னெடுப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம், கோகா- கோலா உலகிற்குப் புத்துணர்வூட்டி, வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு நிலையான மாற்றத்தை ஏற்படுத்த இலக்கு கொண்டுள்ளது. புதிய தயாரிப்புகள், சமூக முன்னேற்ற முயற்சிகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம், உலகை புத்துணர்ச்சியூட்டவும், வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்களின் வாழ்க்கையில் நிலையான மாற்றத்தை ஏற்படுத்தவும் Coca-Cola நிறுவனம் உறுதிபூண்டுள்ளது.