நிலையான அமைதிக்கான உலகளாவிய ஒத்துழைப்பை எடுத்துக்காட்டிய உலக சமாதான உச்சி மாநாடு
The 11th HWPL World Peace Summit, organized by Heavenly Culture, World Peace, Restoration of Light (HWPL), was held in Cheongju, Republic of Korea on September 18, 2025, bringing together over 800 global leaders to discuss peace initiatives.
சியோங்ஜு, கொரிய குடியரசு – செப்டம்பர் 18, 2025 – சர்வதேச சமாதான அரசு சாரா நிறுவனமான ஹெவன்லி கல்ச்சர், வேர்ல்ட் பீஸ், ரெஸ்டோரேஷன் ஆஃப் லைட் (HWPL), 800க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்களைக் கூட்டி, சியோங்ஜுவில் 11வது HWPL உலக சமாதான உச்சி மாநாட்டை நடத்தியது.
இந்த உச்சிமாநாடு, அரசாங்கங்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் சிவில் சமூகம் சாதனைகளைப் பகிர்ந்து கொள்ளவும், நீடித்த சமாதானத்தை அடைவதற்கான எதிர்கால உத்திகளைப் பற்றி விவாதிக்கவும் ஒரு தளமாக செயல்பட்டது.
இந்த வருட உச்சிமாநாடு மூன்று முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எடுத்துக்காட்டியது.
சர்வதேச சட்டத் துறையில், HWPL இன் அமைதி மற்றும் போர் நிறுத்தப் பிரகடனம் (DPCW) மேலும் உத்வேகம் பெற்றது, லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் பாராளுமன்றம் (PARLATINO) மற்றும் 16 தேசிய நாடாளுமன்றங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் பிரகடனத்திற்கு ஆதரவாக தீர்மானங்களை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டன.
சமாதானக் கல்வியில், தேசிய அளவில் நிறுவனமயமாக்கல் நடந்து வருகிறது. சாம்பியாவின் கல்வி அமைச்சகம், நாடு தழுவிய விரிவாக்கத் திட்டங்களுடன், தலைநகர் லுசாகாவில் உள்ள அனைத்து பொதுப் பாடசாலைகளிலும் HWPL இன் சமாதானக்க் கல்வியை செயல்படுத்தியுள்ளது. மங்கோலியாவும் இந்தத் திட்டத்தை அதன் தேசிய பாடத்திட்டத்தில் முறையாக இணைத்துள்ளது.
மதங்களுக்கு இடையேயான உரையாடலில், மதங்களின் ஒற்றுமை சமாதானக் குழுவின் (SRPC) தொடக்கம் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கின்றது. 2023 ஆம் ஆண்டு முதல், HWPL சர்வதேச மத சமாதான அகாடமி (IRPA) பல நாடுகளில் மதத் தலைவர்கள் மற்றும் குடிமக்கள் இருவரும் அமைதியை மையமாகக் கொண்ட சொற்பொழிவில் ஈடுபட உதவும் ஒரு தளமாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
HWPL இன் தலைவர் மான் ஹீ லீ தனது முக்கிய உரையில், "மோதல் ஒருபோதும் நல்லதாக இருக்க முடியாது. சமாதானத்தை அடைவது மட்டுமே நல்லது. நம் காலத்தில் சமாதானத்தை நிலைநாட்டத் தவறினால், எதிர்கால சந்ததியினரை மோதல்களால் சுமைப்படுத்துவோம். நாம் விட்டுச் செல்ல வேண்டியது போர் அல்ல, சமாதான நிறைந்த உலகத்தைத்தான்."
குரோஷியாவின் முன்னாள் ஜனாதிபதி மேன்மை தங்கிய இவோ ஜோசிபோவிக் தனது வாழ்த்துச் செய்தியில், "உலகம் முழுவதும் போரை தடை செய்வதற்கான நமது செயல்பாடு இப்போது முன்னெப்போதையும் விட மிகவும் முக்கியமானது. இந்த ஆண்டின் சாதனைகள் மனிதகுலம் ஒரு நாள் நித்திய சமாதானத்தை அடையும் என்பதற்கான உத்தரவாதமாகும்" என்று கூறினார்.
"சுற்றுச்சூழல் பிரச்சினைகள், போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் போன்ற சவால்களை சமாளிக்க குடிமை விழிப்புணர்வு சீர்திருத்தம் அவசியம்" என்று உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட இலங்கையின் மூத்த பத்திரிகையாளர் திரு. வில்லியம் சுகுமார் ராக்வுட் வலியுறுத்தினார். HWPL இன் LP திட்டம் இந்த மாற்றங்களுக்கு வழிவகுக்கும். மேலும், HWPL உடனான ஒத்துழைப்பு இலங்கையில் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் தேசிய வளர்ச்சி இரண்டிலும் முக்கிய பங்கு வகிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இலங்கையைச் சேர்ந்த பிற சமாதான பிரதிநிதிகளும் உச்சிமாநாட்டில் கலந்துகொண்டனர், அவர்களில் பின்வருவனவோர் அடங்குவர்:
● அலையன்ஸ் டெவலப்மென்ட் டிரஸ்டின் (ADT) செயலாளர் மற்றும் இணை பிரதிநிதிகள்
● சமாதான கல்விக்கான அமைதி தூதர் திரு. யூசுப்
● SL IPYG இன் அமைதி ஆதரவாளர்களான திரு. இரேஷா மற்றும் திருமதி. அதீபா
● சமாதான ஆதரவாளர் மற்றும் மத பிரதிநிதி திரு. யாசிர்
● பொருளாதார மேம்பாட்டு நலன்புரி அறக்கட்டளையின் பிரதிநிதி திரு. துசன் மற்றும் பிரதிநிதிகள்
● நீர்கொழும்பு டிரினிட்டி சர்வதேச பாடசாலையின் இயக்குநர் திரு.திலீபா பெர்னாண்டோ மற்றும் திருமதி.கித்மினி கருணாநாயக்க
இந்த சமாதான உச்சிமாநாடு கொரிய மறு ஒருங்கிணைப்பு பிரச்சினையையும் எடுத்துரைத்தது மற்றும் HWPL இன் உலகளாவிய உறுப்பினர் எண்ணிக்கை 580,000 ஐத் தாண்டியுள்ளதாக அறிவித்தது. சியோங்ஜுவில் நடைபெறும் முக்கிய நிகழ்வைத் தொடர்ந்து, அக்டோபர் மாதம் வரை உலகளவில் 78 நகரங்களில் 15,000க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்கும் தொடர் மாநாடுகள் நடைபெறும். குறிப்பாக, இந்தியா, இலங்கை மற்றும் காம்பியாவிலிருந்து சட்டம், கல்வி மற்றும் இளைஞர் அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய நபர்களும் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டனர், இது உலகளாவிய சமாதான முயற்சிகளுக்கான பல துறை ஒத்துழைப்பை வலுப்படுத்தியது.
editor